ஊட்டி, டிச.30: கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணையில் உருளைக்கிழங்கு விதைகள் விற்பனைக்கு உள்ளதாக தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
குப்ரி கிரிதாரி ரகமானது பின்கருகல் மற்றும் முன்கருகல் நோய் எதிர்ப்பு தன்மை, அதிக மகசூல் தர கூடியது. இவ்விரண்டு ரக விதைகளும் கிலோவிற்கு ரூ.35 வீதம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பயிரிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் தேவையுள்ள விவசாயிகள் கோல்கிரைன் அரசு தோட்டக்கலை பண்ணையை அணுகலாம். மேலும் 8838447007 என்ற தொலைபேசியினை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் படிமட்டங்கள் அமைத்து உருளை சாகுபடி செய்ய வேண்டும் என தோட்டக்கலைத்துறை கேட்டு கொண்டுள்ளது.