×

கோல்கிரைன் பண்ணையில் உருைளக்கிழங்கு விதைகள் விற்பனைக்கு தயார்

ஊட்டி, டிச.30: கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணையில் உருளைக்கிழங்கு விதைகள் விற்பனைக்கு உள்ளதாக தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.


கடந்த மாதம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அளித்த வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாண்டு உருளைக்கிழங்கு விதைகள் குப்ரி கிரிதாரி மற்றும் குப்ரி ஜோதி ஆகிய உருளைக்கிழங்கு பயிர்கள் விதைக்காக பயிரிடப்பட்டு தற்போது சுமார் 30 மெட்ரிக் டன் அளவில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது.

குப்ரி கிரிதாரி ரகமானது பின்கருகல் மற்றும் முன்கருகல் நோய் எதிர்ப்பு தன்மை, அதிக மகசூல் தர கூடியது. இவ்விரண்டு ரக விதைகளும் கிலோவிற்கு ரூ.35 வீதம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பயிரிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் தேவையுள்ள விவசாயிகள் கோல்கிரைன் அரசு தோட்டக்கலை பண்ணையை அணுகலாம். மேலும் 8838447007 என்ற தொலைபேசியினை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் படிமட்டங்கள் அமைத்து உருளை சாகுபடி செய்ய வேண்டும் என தோட்டக்கலைத்துறை கேட்டு கொண்டுள்ளது.

Tags : sale ,Colegrain Farm ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி...